Thursday, December 29, 2011

தாசிகா..


சென்னை சைதாபேட்டையில் உள்ள ஸ்ரீ ரகவேந்திரா மண்டபத்தில் அண்ணா ஹசரே ஆதரவாளர்கள் தொடர் மூன்று நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதில் அண்ணா ஹசரேவிற்கு ஆதரவு தெரிவித்த மூன்று வயது இளம் குழந்தை தாசிகா..
மூன்று வயதே நிரம்பி இருந்தாலும்., ஏதோ பத்து வயது பிள்ளையை போல் பேச்சு, நடை, முக பாவனைகள். இந்தியா சிந்தாபாத், பாரத் மாதாக்கி ஜே, வந்தே மாத்தரம் என்று அனைத்தையும் மிக சரியான உச்சரிப்பில் பிழையின்றி கூறுகிறாள். இன்று அனைத்து கேமராக்களும் அவளையே வட்டமிட்டு சுற்றி திரிந்தது.. இவளுக்கு இந்த வயதில் ஏன் இந்த ஆர்வம் என்று அவளின் பாட்டியிடம் வினவினேன்?., "அவளின் தாத்தா இது போன்ற சமுக முயற்ச்சிகளில் ஈடுபடுவார். இவளையும் சிறு வயதில் இருந்து இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு உடன் அழைத்து செல்வார். அங்கு இது போன்ற வசனங்களை கேட்டு பழகிக் கொண்டாள்.. டி.வியிலும் சமுக நிகழ்ச்சிகளையே அவளின் தாத்தா பார்ப்பார் அவளும் அதையே பார்ப்பாள்" என்றார்.. தாத்தாவின் பழக்கம் இவளுடன் இனைந்து விட்டது. தந்தைக்கும் மகனுக்கும் இருக்ககூடிய தலைமுறை இடைவேளி() தாத்தாவிற்கும் பேரனுக்கும் இருக்காது என்ற பழமொழி நினைவிற்கு வருகிறது.

Friday, September 16, 2011


கல்வி வளர்ச்சி காணும் அயோத்தியா குப்பம்

வீதி முழுக்க குப்பைகளும், சுற்றி சாக்கடை, சானதின் சகதியுமாக இருக்கிறது. எப்படி முன்னேறும் இப்பகுதிகள் என்றால் "அரசு தான் அக்கறை காட்ட வேண்டும்" என்கிறது பல குரல்கள். ஆனால் நாம் தான் மாற்ற வேண்டும்" என்கிறது ஒரு தனிக் குரல்.

"ேள்வி கேட்க ஆளில்லாததுதான் எல்லாவற்றிக்கும் காரணம். கல்வி அறிவு கிட்டாத இம்மக்களுக்கு அது கிடைக்குமாயின் இந்த பகுதி மட்டுமல்ல, எல்லாமே மாறிவிடும்" என்கிறார் அயோத்தியா குப்பம் மீனவ மன்ற தலைவர் சசி குமார்.

மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் இம்மக்களுக்கு கவனிக்க யாருமில்லை. தந்தையின் தொழிலையே தாங்களும் செய்து வரும் பரம்பரை வழக்கம் இன்னும் மாறவில்லை. இது கல்வியால் மட்டுமே சாத்தியம்" என்றார். பெரும்பாலும் வறுமை, குடும்பச் சூழல் காரணமாக யாரும் குழந்தைகளை பள்ளிகு அனுப்புவதில்லை. ஆனால் இந்த நிலையை தற்பொழுது மாற்றி வருகிறார் சசி குமார். இதுவரை 102 மாணவர்களுக்கு மேல் கான்வெண்ட் பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளிலே படிக்கவைக்கலாம் ஆனால் அவர்களுக்கு வேறு வகையான சூழலை நாடுகிறார்கள். மன்றம் சார்பில் நாங்கள் யாரிடமும் பணம் ஈட்டுவதில்லைஇவர்களின் கல்வி செலவை பல அரசாங்க உழியர்கள், பெரிய ஆட்கள் என யரையாவது சந்தித்து மணவர் பெயர், அவரின் எதிர்கால ஆசை, படிக்க விரும்பும் பள்ளி, அவரின் குடும்ப சூழ்நிலை தந்தை தொழில் நிரப்பாட்ட விண்ணபத்தை அவர்களிடம் காட்டுவோம். அவர்கள் மாணவரின் கல்வி தொகையை அந்த பள்ளிகே காசோலையை அனுப்பிவிடுவார்கள்". மாலை நெரங்களில் மணவர்களுக்கு கணினி பயிற்சியும், அவர்கள் வாசிக்க சிறிய நூலகம் அமைக்கப்பதுள்ளது.

கான்வெண்ட் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிஸ் எங்க குப்பது பசங்கல படிக்க வெக்குறது ரொம்ப  பெருமையா இருக்கு" என்று பெருமிதம் கொள்கிறார் சசி குமார்.

Monday, September 5, 2011


பால வித்யாலயா பள்ளி குழந்தை.


FIRST SCHOOL IN PERAMBUR

                  
Jamalia Higher Secondary school was founded by the former M.P. M.J. Jamal Mohideen Sahib of Jamalia Arab College. It was the first school to be started in perambur during 1962, for economically deprived. There are over 600 students studying in the school at present.




The building complex in which it is situated was declared as “Heritage Building”  in 2010. Originally it was intended for the refugees from Burma coming into India in 1925. Later it became the hostel for the students of Jamalia Arab College.


Janab Abdullah Sheriff was the first Haed master of this school, instructions is offered in English as well as in Tamil medium. In 1986 it became government aided school and this in change over enabled the facilities of the school to be improved. Then the chief education officer, janab Sultan Mohiden extended all support for the improvement to be effected.

The school is hearing for the “Golden Jubilee” celebrations planned for 2012. K.K. Mohammed Iqbal is the present Head Master.

Sunday, September 4, 2011


எனது எதிர்காலம் உறங்கிக் கொண்டிருக்கிறது.
அவள் நாளை என்னைப்போல் உழைக்க கூடாது என்பதற்காக
உழைக்கிறேன்.

Friday, September 2, 2011

வண்ணத்துபூச்சி




நீ ஒரு வண்ணத்துபூச்சியை நேசிப்பதாக இருந்தால் அதை பறக்க விடு..
அது உன்னை நேசிப்பதாக இருந்தால் உன்னை தேடி வரும்..
என்னை தேடி வந்த வண்ணத்துபூச்சி....

கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்...


தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்வி ட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி,மெட்ரிக் நிர்வாகிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்து தாஸ் கூறினார்..

இதை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட் ரிக் நிர்வாகிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்து தாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். பெற்றோர்களும் தரம் காரணமாக தனியார் பள்ளிகளையே நாடுகிறார்கள். கல்வி தரத்திற்க்கு ஏற்ற கட்டணத்தையே தனியார் பள்ளிகள் வசூளிக்கின்றது. பேராசிரியர் சிட்டிபாபு கமிட்டி அறிக்கயில் கூறப்படுள்ள பள்ளி கட்டிடங்களுக்கு உள்ள நில அளவை ரத்து செய்ய வேண்டும், தேசிய அளவில் பாடத்திட்டதை மாற்றி அமைக்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின் படி தனியார் புத்தகங்களை வெளியிட உரிமம் வழங்க வேண்டும் இவ்வாறு பல அம்ச கோரிக்கைகளை அவர் முன்னிறுத்தி பேசினார்.


"தமிழக அரசால் பிரப்பிக்கபட்ட இரண்டு உத்தரவில் சமச்சீர் கல்வியும் ஒன்று. அதை தனியார் பள்ளிகள் பின்பற்றுவதாக தெரியவில்லை" என்ற பத்திரிக்கை நன்பர் கேள்விக்கு அவரது பதில்:-
சமச்சீர் கல்வியை அரசங்க பள்ளிகளே தடை செய்கிறார்கள் என்பதே எனது குற்றச்சாட்டு.
ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 11 தேர்வுகள் வைத்தால் தான் அந்த மாணவன் சி.பி.எஸ்.சி தேர்வுக்கு இணையாகை படிப்பான் என்ற என்னுடைய கருத்தை தமிழக அரசுக்கு முன்னிறுத்தினேன். ஆனால் அதை அரசாங்க பள்ளிகல் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்களும் சி.பி.எஸ்.சி பாட திட்டத்தையே விரும்பிகிறார்கள். அரசு சமச்சீர் பாட திட்டத்தை மாற்றி தேசிய பாட் திட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழக அரசு இதை செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பயதிலளித்தார். மேலும் பரத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் சமாளித்ததால் பத்திரிக்கையாளர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.