பி.காம். நோக்கி படையெடுக்கும் மாணவிகள்..
சென்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
+2 பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகி 20 நட்களே ஆன நிலையில் சென்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படையெடுக்கும் மாணவிகளில் பெரும்பாலானோர் “பி.காம்” துறையே விரும்புகின்றனர்.
சென்னை காயிதமிலத் கல்லூரியில் இதுவரை 3000 விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன. அதில் இருந்து 150 இடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் ரீதியாக தேர்ந்தேடுக்கப்படுகின்றனர். சென்னை எத்திராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் இதே நிலைதான். ஆனால் எத்திராஜ் கல்லூரியில் பி.காம்., பி.காம்-கார்ப்ரேட்., மற்றும் பேங்க் மேனேஜ்மென்ட் என்று மூன்று பிரிவாக சேர்க்கை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment